'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

மலையாள நடிகர் விநாயகன் ஏற்கனவே தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் கடந்த வருடம் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த ஜெயிலர் திரைப்படம் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அவரது வர்மா கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனாலும் அவரது குணாதிசயங்களாலும் பிரச்னைக்குரிய செயல்பாடுகளாலும் பெரிய அளவில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகவில்லை. இந்த நிலையில் தற்போது கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் விநாயகன். மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் மம்முட்டி வில்லனாக முக்கிய வேடத்தில் இருக்கிறார் என்பது தான் இதில் ஆச்சரியமான செய்தி.
அது மட்டுமல்ல இந்த படத்தை மம்முட்டியின் சொந்த நிறுவனமான மம்முட்டி கம்பெனியே தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் வே பாரர் பிலிம்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. அறிமுக இயக்குனர் ஜித்தின் கே ஜோஸ் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நாகர்கோவிலில் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மம்முட்டியும் இந்த படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பில் இணைந்துள்ளார். விநாயகனும் அவரும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இதை உறுதிப்படுத்தி உள்ளது.




