
இயக்குனர் ரஞ்சித் மீது நடிகர் பாலியல் புகார் ; போலீஸ் வழக்கு பதிவு
இந்த புகாரில் அந்த நடிகர் கூறியுள்ளதாவது : “இயக்குனர் ரஞ்சித் என்னை ஆடிசன் செய்ய வேண்டும் என்பதற்காக தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரச் சொன்னார். ஆடிசன் என்கிற பெயரில் எனது ஆடைகளை களையச் செய்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இதை நான் ஆடிசனின் ஒரு பகுதி என்றுதான் நான் நம்பினேன். அந்த சமயத்தில் நடிகை ஒருவருடன் போனில் பேசிக்கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபட்ட அவர் அதன் பிறகு அந்த புகைப்படங்களை அந்த நடிகைக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு தான் அந்த நடிகை ரேவதி என்றும், தான் அனுப்பி வைத்த என்னுடைய புகைப்படங்களை அவரும் ரசித்தார் என்றும் என்னிடம் கூறினார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். மறுநாள் காலை இதற்காக எனக்கு கணிசமான தொகையும் கொடுத்தார் ரஞ்சித். இதனால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் நான் இருந்தேன். தற்போது ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து ரஞ்சித்தின் மீது காவல்துறையில் புகார் அளிக்க முன்வந்தேன்” என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!