சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு இணையான நடிகராக வலம் வந்தவர் சுரேஷ் கோபி. ஆக்ஷன் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி தனக்கென தனி ரசிகர்களை பெற்ற இவர் ஒரு கட்டத்தில் அரசியலிலும் கால் வைத்தார். அதனால் சினிமாவில் ஒரு சிறிய இடைவெளி விழுந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் படங்களை பிஸியாக நடித்து வருகிறார். இவரது வாரிசுகளை பொருத்தவரை இரண்டு மகன்களில் மூத்தவரான கோகுல் சுரேஷ் தற்போது மலையாளத்தில் கதாநாயகனாகவும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இளைய மகன் நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
இரண்டு மகள்களில் மூத்தவரான பாக்யாவுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மாவேலிக்கரையை சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரேயாஸ் மோகன் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் பாக்யா. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் உள்ள சுரேஷ் கோபியின் இல்லத்தில் நடைபெற்றது. திருமணம் வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து ஜனவரி 20ல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறார் சுரேஷ் கோபி. பாக்யா சமீபத்தில் தான் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.