
லூசிபர் இரண்டாம் பாகத்திற்காக லண்டனில் முகாமிட்டுள்ள பிரித்விராஜ்
அடுத்தடுத்து மோகன்லால் பிரித்விராஜ் இருவருமே தொடர்ந்து பிசியாக நடித்து வந்ததால் அந்த படத்தின் பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெரும்பாலும் வெளிநாட்டில் தான் இந்தப்படம் படமாக்கப்பட இருக்கிறது என்று ஏற்கனவே பிரித்விராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது லண்டனில் முகாமிட்டுள்ள பிரித்விராஜ், இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து லண்டனில் இருந்து தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு மூன்றாவது நாளாக எம்பிரான் படத்திற்கான லொகேஷன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் பிரித்விராஜ்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!