பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் | விஸ்மாயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் தொடக்கம் படப்பிடிப்பு நிறைவு | என்னுடைய படம் பார்க்க தனுஷ் வந்தது ஏன் ? ; மிருணாள் தாக்கூர் வெளிப்படை பதில் |

மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டியின் வாரிசாக செகண்ட் ஷோ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் துல்கர் சல்மான். ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இந்த படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப்படத்தில் தான் மலையாள நடிகை கௌதமி நாயரும் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்த கௌதமி நாயர், கடந்த 2017ல் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரனையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போதே அவர்கள் இருவருக்குமான வயது வித்தியாசம் பரபரப்பாக பேசப்பட்டது.
இவர்கள் திருமணம் முடிந்த ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது தங்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக ஒரு தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் கௌதமி நாயர். இதுகுறித்து அவர் கூறும்போது, “திருமண வாழ்க்கை துவங்கிய சில காலகட்டங்களிலேயே எனக்கும் அவருக்குமான கருத்து வேறுபாடு மிகப்பெரிய பிரச்சனையாக தலை தூக்கியது. அதேசமயம் அவரிடம் இருந்து துன்புறுத்தல், அச்சுறுத்தல் என எந்த ஒரு தவறான செய்கையும் என் மேல் பிரயோகிக்கப்படவில்லை. யாராவது ஒருவராவது சமரசம் செய்து கொண்டு விட்டுக்கொடுத்து சென்றிருக்க வேண்டும். ஆனால் எங்கள் இருவராலும் அப்படி சமரசம் செய்து கொள்ள முடியவில்லை. இருவருமே ஒருவருக்கொருவர் பேசி டீசன்டாக பிரிந்து விடலாம் என இந்த முடிவுக்கு வந்தோம். இப்போது கூட நாங்கள் நண்பர்களைப் போல அவ்வப்போது ஒருவர் குறித்து ஒருவர் விசாரித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.