
குஞ்சாக்கோ போபனுக்கு அரவிந்த்சாமி கொடுத்த ஆபர்
இது குறித்து குஞ்சாக்கோ கூறும்போது, “மும்பையில் நானும் அரவிந்த்சாமியும் ஒரு ரெஸ்டாரண்டில் உணவருந்த சென்றபோது அங்கிருந்த செப்கள் இரண்டு பேர் அரவிந்த்சாமி மிகச்சிறந்த குக் என்றும் அவர் சமைக்கும் உணவுகளின் சிறப்பு பற்றியும் பாராட்டி பேசினார்கள். அதற்கு முன்னதாக அவர்கள் சென்னைக்கு வந்திருந்தபோது அரவிந்த்சாமி சமைத்த உணவுகளை சாப்பிட்டுவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனார்களாம். அதுமட்டுமல்ல, அரவிந்த்சாமியின் மகள் சென்னையில் நான்கு நாட்கள் உணவு திருவிழா ஒன்றையும் நடத்தி உள்ளாராம். இந்த தகவல்களை எல்லாம் அப்போது கேட்டு ஆச்சரியமடைந்தேன்.
அந்த சமயத்தில் அரவிந்த்சாமி எனக்கு ஒரு ஆபர் கொடுத்தார்.. அதாவது அவர் அடுத்த முறை அவர் கேரளா வரும்போது என்னுடைய வீட்டிற்கு வருவதாகவும் எனக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து தருவதாகவும் கூறினார். எனது வீடு அந்த அளவுக்கு பெரிதாக இல்லையே என்று தயங்கினேன்.. எனக்கு சமைப்பதற்கு ஒரு கிச்சன் மட்டும் கொடுங்கள்.. அது போதும் என்று கூறினார் அரவிந்த்சாமி. அவர் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார் குஞ்சாக்கோ போபன்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!