'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

மலையாள திரையுலகில் நடிகர் பிரிதிவிராஜ் பிசியான நடிகராக நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் துவங்கப்பட்ட ஆடுஜீவிதம் திரைப்படம் பல கட்ட படப்பிடிப்புகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொரோனா முதல் அலை பரவ ஆரம்பித்த சமயத்தில் ஜோர்டான் நாட்டில் உள்ள வாடி ரம்மில் உள்ள பாலைவனப்பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது லாக்டவுன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேல் அங்கேயே பிரித்விராஜ் மற்றும் படக்குழுவினர் முடங்கிக் கிடக்க நேரிட்டது.
இந்த படத்தில் கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்று பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் நஜீப் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரித்விராஜ். இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பை அதே வாடி ரம் பகுதியில் தற்போது நடத்தி வருகின்றனர் ஆடுஜீவிதம் படக்குழுவினர். இதற்காக கடந்த மாதமே பிரித்விராஜ் கேரளாவில் இருந்து கிளம்பி சென்றுவிட்டார்.
இந்த நிலையில் அவரது மகள் அலங்கரிதா தந்தையை பார்க்க வேண்டும் அடம் பிடித்ததால் மகளை அழைத்துக்கொண்டு கணவரை பார்ப்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் பாலைவனத்திற்கே கிளம்பி வந்துவிட்டார் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன். மனைவி குழந்தையின் வருகையால் படப்பிடிப்பிற்கு அவ்வப்போது கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு குடும்பத்துடன் ரிலாக்ஸாக ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பி விடுகிறாராம் பிரித்விராஜ்.




