இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
தற்போது அய்யப்பனும் கோஷியும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக்கில் நடித்து முடித்துவிட்ட நடிகர் பவன் கல்யாண், அதை தொடர்ந்து தான் ஏற்கனவே நடித்துவந்த ஹரிஹர வீர மல்லு என்கிற படத்தின் வேலைகளை மீண்டும் கவனிக்க ஆரம்பித்துவிட்டார். நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தை கிரிஷ் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சுமார் 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் நிலைமை சரியான பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
அந்தவகையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் மீண்டும் துவங்கப்பட உள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்ய சொன்ன பவன் கல்யாண் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பாக ஒருமுறை ஸ்கிரிப்ட் முழுவதையும் படித்து பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் இயக்குனர் க்ரிஷ்.