புதுமணத் தம்பதியை வரவேற்ற 'ரணபாலி' குழு | 'ஜனநாயகன்' லீக்: கலையை காக்க நடிகர் சங்கம் வேண்டுகோள் | மும்பை திரையரங்குகளில் 300 கோடியை தாண்டிய முதல் இந்திய திரைப்படம் 'துரந்தர்-2' | மே 14ம் தேதி புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் மணிரத்னம்! | ஏப்ரல் 16ல் ஓடிடியில் வெளியாகும் 'யூத்' | பிளாஷ்பேக்: வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் “நவயுவன்” | பிளாஷ்பேக்: திரையரங்கை விட்டு எடுக்க மறுத்த இயக்குநர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணனின் திரைப்படம் | மருதநாட்டு இளவரசி, ஜெயம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை |

சினிமாவில் மட்டுமல்ல மிகப்பெரிய நிறுவனங்களும் கூட தங்களது விளம்பரப்படங்களில் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் ராபிடோ என்கிற நிறுவனத்துக்காக அல்லு அர்ஜுன் நடித்த விளம்பர வீடியோ ஒன்று வெளியானது. இந்த விளம்பரம் மூலம் அவருக்கு புதிய சிக்கலும் தேடிவந்துள்ளது.
இருசக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்ல உதவும் ராபிடோ என்கிற ஆப்-பின் வசதிகளை விவரிக்கும் இந்த விளம்பரத்தில் தெலங்கானா அரசு போக்குவரத்து பேருந்துகள் கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் அவற்றில் பயணிப்பதற்கு பதிலாக ராபிடோ பயன்படுத்துவது சிறந்தது என்றும் அல்லு அர்ஜுன் வசனம் பேசியுள்ளார்.
இது அரசு போக்குவரத்து பேருந்துகளை அவமதிப்பு செய்யும் விதமாக இருப்பதாக தெலங்கானா அரசு போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர் சஜ்ஜனார் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு சேவை நிறுவனங்களை அவமதிப்பு செய்யும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.