ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக, எதிரணி பவுலர்களை கதிகலங்க வைத்தவர் கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த்துக்கு அதன்பின்னர் பின்னடைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சினிமா பக்கம் தனது கவனத்தைத் திருப்பியவர், டீம் 5 என்கிற மலையாள படத்தில் ஹீரோவாக நடித்தார் மேலும் ஒன்றிரண்டு படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர், தற்போது இந்தியில் 'பட்டா' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் இவருக்கு சிபிஐ அதிகாரி வேடம். ராதாகிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார் இந்த படத்தில் ஸ்ரீசாந்த் நடிப்பது குறித்து இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “நான் உருவாக்கிய சிபிஐ ஆபீசர் கதாபாத்திரத்திற்கு, ஸ்ரீசாந்த் மிகப்பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. அவரிடம் இந்த கதை பற்றி கூறியபோது ஒரு காட்சியை என்னிடம் நடித்துக் காட்டினார். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. இந்த படத்தில் அவருடன் இருப்பவர்களே, அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று யூகிக்க முடியாத புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிரடியான சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார் ஸ்ரீசாந்த்” என்று கூறியுள்ளார்