
ஓடிடியில் வெளியாகும் பெல்பாட்டம்
இந்த ஆண்டு இறுதிவரை தியேட்டர்கள் திறக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் உரிமையை கடும் போட்டிக்கு இடையே, அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளியாகும்.
இதற்கிடையில் தனது பட வெளியீடு தொடர்பாக அக்ஷய்குமார் விடுத்துள்ள அறிக்கையில், "பெல் பாட்டம் பட வெளியீடு குறித்து எனது ரசிகர்களின் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். அத்துடன் அவர்களின் அன்பிற்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வெளியீட்டுத் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருகிறார்கள். சரியான நேரத்தில் அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!