தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் பாலிவுட் மீளவில்லை. இந்த நிலையில் அவரது நண்பரும் எம்.எஸ்.டோனி படத்தில் அவருடன் நடித்தவருமான சந்தீப் நஹாரும் மும்பை ஜார்ஜியான் பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹரியானாவில் பிறந்த சந்தீப் நடிக்கும் ஆசையில் கடந்த 2009ம் ஆண்டு மும்பைக்கு வந்தார். 2016ம் ஆண்டு எம்.எஸ்.தோனி படத்தில் நடித்தார். தோனி படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ள தனது மனைவியின் டார்ச்சரே காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து மும்பை ஜார்ஜியா பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.