'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? | பிளாஷ்பேக்: முரணான தலைப்பு, முத்தான வெற்றி, முயற்சித்து சாதித்த இயக்குநர் கே பாக்யராஜ் | 'சூர்யா- 46' படத்தின் டைட்டில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது! | பிளாஷ்பேக்: வாள்வீச்சு நாயகன் ரஞ்சனின் வெள்ளித்திரை வரவுக்கு வித்திட்ட “ரிஷ்யசிருங்கர்” | கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்! | 'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி! | 'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா | குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு |

நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த மது மந்தெனா அதிலிருந்து விலகினார். அதோடு, படத்தின் மொத்த உரிமையும் தங்களிடம்தான் உள்ளது. அதனால், படத்தைத் தொடரக் கூடாது என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இதனிடையே, கடந்த வாரம் மீண்டும் ஆரம்பமான 'ராமாயணா' படப்பிடிப்பு சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது என மும்பை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மது மந்தெனாவின் காப்பிரைட் வழக்கு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்பு படப்பிடிப்பை நடத்த உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அதே சமயம் ரன்பீர் தேதிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைத்துள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
ராமராக ரன்பீரும், சீதையாக சாய் பல்லவியும், இராவணனாக யஷ் நடிக்கும் இந்த 'ராமாயணா' படத்தை இரண்டு பாகங்களாகத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.




