தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

வேகமாக வளர்ந்த வந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்து புகழ் பெற்றார். கடந்த 2020ம் ஆண்டு, மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைவு இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலை வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட வீட்டை அவரது உறவினர்கள் வாடகைக்கு விட முயற்சி செய்தனர். ஆனால் யாரும் அந்த வீட்டில் குடியேறத் தயங்கினர். விலைக்கு வாங்கிக் கொள்ளவும் யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில் பாலிவுட் நடிகை அடா சர்மா அந்த வீட்டை வாங்க உள்ளார். அடா சர்மா பரபரப்பை கிளப்பி 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்தவர், தமிழில் 'சார்லி சாப்ளின் 2' படத்தில் நடித்தார், 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அடா சர்மா “பணிகள் நடந்து வருகிறது. எல்லாம் முழுமையான பிறகு நானே முறைப்படி அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.