தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களுக்கு இணையான வரவேற்பை ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸ் உள்ளிட்ட படைப்புகள் பெற்று வருகின்றன. ஆனால் சினிமாவில் சொல்ல முடியாத கதையை, காட்ட முடியாத காட்சிகளை, அநாகரிகமான வார்த்தை, வசனங்களை எளிதாக பயன்படுத்தும் களமாக ஒடிடி தளங்களை மாற்றி விட்டனர். இதனால் ஒடிடி தளங்களுக்கும் சென்சார் வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான் கான், வெப் சீரிஸ்களின் சமீபத்திய போக்கு குறித்தும் அதற்கு சென்சார் கட்டாயம் வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தி பேசியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சல்மான்கான் பேசும்போது, “தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் பல வெப் சீரிஸ்களில் ஆபாசம், அநாகரிக வார்த்தைகள் என நிறைய இடம் பெற்று வருகின்றன. 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்ப்பது என்றால் ஓகே. ஆனால் இன்று எல்லோர் கைகளிலும் மொபைல் போன் இருப்பதால் உங்களது சின்ன குழந்தை கூட இது போன்ற படங்களை பார்ப்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா ? அதனால் ஓடிடியில் வெளியாகும் படைப்புகளும் நிச்சயமாக சென்சார் செய்யப்பட வேண்டும்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், இன்றைய தலைமுறையை சேர்ந்த இளம் நட்சத்திரங்கள், இதுபோன்ற படைப்புகளை சூப்பர், கடின உழைப்பு, திறமை என்கிற வார்த்தைகளால் பாராட்டி வருவது தான்.. அதே சமயம் முன்பை விட தற்போது நல்ல கருத்தாக்கம் கொண்ட ஒரு சில படைப்புகளும் ஓடிடியில் வெளிவருவதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.