ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாரூக்கான் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் 'சாட்' செய்தார். அப்போது பல்வேறு விதமான கேள்விகளை ரசிகர்கள் அவரிடம் கேட்டனர். ஒரு ரசிகர், 'விஜய்யைப் பற்றிச் சொல்லுங்கள்,” என்று கேட்டதற்கு “அவர் மிகவும் இனிமையானவர், அமைதியானவர். எனக்கு அன்பான டின்னரையும் அளித்தார்,” என்று புகழ்ந்து பதிலளித்துள்ளார்.
இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் ரசிகர்களுடன் 'சாட்' செய்த போதும் விஜய் பற்றிய ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, “விஜய் மிகவும் கூல் ஆன மனிதர்” என்று பாராட்டியிருந்தார்.
விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் தற்போது நடித்து வரும் 'ஜவான்' படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.