'வாரணாசி' படத்தின் பட்ஜெட், 1300 கோடியா ? | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கட்அவுட் | பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி | 'பொன்னியின் செல்வன்' பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு | செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை | 'நான் ருத்ரன்' படத்தில் நடிக்க மறுப்பு : 20 கோடி நஷ்டஈடு கேட்டு தனுசுக்கு நோட்டீஸ் | ஜெயிலர் 2 படத்தை ஜூன் மாதத்திலேயே வெளியிட திட்டம் | அமீர்கான் மகனுக்கு ஜோடியான தமன்னா | ரூ. 40க்கு தனது சாப்பாடு தரும் அர்ஜித் சிங் | தயாரிப்பு நிறுவனம் துவங்கும் ரியோ ராஜ் |

'பாகுபலி' படத்திற்குப் பிறகு சில தென்னிந்திய ஹீரோக்கள் பான்-இந்தியா ஸ்டார்களாக மாறி வருகிறார்கள். பிரபாஸுக்கு பாலிவுட்டிலும் தனி மார்க்கெட் உருவாகி விட்டது. சமீபத்தில் 'புஷ்பா' வெற்றி முலம் அல்லு அர்ஜுனும் தனது கணக்கைத் துவக்கியுள்ளார். அடுத்தடுத்து மேலும் சில தென்னிந்திய படங்கள் பான்-இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.
அடிக்கடி சர்ச்சை கருத்துக்களைப் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் பாலிவுட் நடிகையான கங்கனா ரணவத் தற்போது தென்னிந்திய ஹீரோக்களைப் பற்றி ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “தென்னிந்திய ஸ்டார்களும், தென்னிந்திய படங்களும் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறது என்பதற்கு சில காரணங்கள்…1.அவர்கள் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியவர்கள், 2. அவர்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் உறவுகளை நேசிக்கிறார்கள், மேற்கத்திய மயமாக இருக்கவில்லை, 3. அவர்கள் தொழில்முறையும் ஆர்வமும் இணையற்றது,” எனக் குறிப்பிட்டு, “பாலிவுட் அவர்களை கெடுப்பதற்கு அனுமதிக்கக் கூடாது,” என பதிவிட்டுள்ளார்.
தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டிற்கு அடுத்தடுத்து சில நடிகர்கள் வந்து வெற்றி பெறுவதால் பாலிவுட் ஹீரோக்களை வெறுப்பேற்ற இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறாரோ கங்கனா ?.