தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

1997ல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். அதன்பிறகு தமிழில் ஜீன்ஸ், பாபா, ராவணன், எந்திரன் என நடித்தவர். தற்போது 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யாராய்.
இதையடுத்து அவர் ஹிந்தியில் இஷிதா கங்குலி என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப்படத்தின் கதை தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய ‛3 வுமன்' என்ற கதையை தழுவி எடுக்கப்படுகிறது. மூன்று நாயகிகள் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.