‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு | டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை | இரண்டு மொழிகளில் வெளியாகும் 'பர்தா' | அரசு வாகனத்தில் சொகுசு பயணம்: சர்ச்சையில் சிக்கிய நித்தி அகர்வால் | நீடிக்கும் ஸ்டிரைக் - அமைச்சர்களை சந்தித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் |
ஜெயா டிவியில் மாயா என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பி.நித்தியானந்தம் இயக்கத்தில் சத்யஜோடி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த தொடரில் ஈஸ்வரி ராவ், அபிஷேக், வாணி, ஜெகதீஷ் ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதைப்படி, சந்திரசேகரன் மிகப்பெரும் தொழில் அதிபர். இவரின் ஒரே மகள் மாயா ஆர்கிடெக்ட். அன்பானவள். அழகானவள். அவள் கைக்குழந்தையாக இருந்தபோதே சந்திரசேகரனை அவரது மனைவி பரமேஸ்வரி விவாகரத்து மூலம் பிரிந்து சென்று தொழில் அதிபர் அமர்நாத்தை மணந்து கொண்டாள். அதன்பிறகு சந்திரசேகரன் தன் மகள் மாயாவே உலகம் என்று வாழ்ந்து வருகிறார். அதோடு அமர்நாத்தின் அத்தனை தொழில்களுக்கும் போட்டி நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்.
நாளுக்கு நாள் போட்டி வலுத்த நிலையில் அமர்நாத் - பரமேஸ்வரியின் மகன் ரமேஷ் ஜெயிலுக்குப் போவதும், மாயா முதல்வர் கையால் விருது வாங்குவதும் ஒரே நாளில் நடக்கிறது. தான் தோற்றுவிட்டதாய் ஆத்திரப்படும் பரமேஸ்வரி, சந்திரசேகரனை நடுத்தெருவில் நிறுத்தி மாயாவை தன் பக்கம் கொண்டு வருவேன் என சபதம் எடுக்கிறாள். பரமேஸ்வரியின் சபதம் வென்றதா? சந்திரசேகரனின் லட்சியம் வென்றதா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.