மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
ஜெயா டிவியில் மாயா என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பி.நித்தியானந்தம் இயக்கத்தில் சத்யஜோடி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த தொடரில் ஈஸ்வரி ராவ், அபிஷேக், வாணி, ஜெகதீஷ் ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதைப்படி, சந்திரசேகரன் மிகப்பெரும் தொழில் அதிபர். இவரின் ஒரே மகள் மாயா ஆர்கிடெக்ட். அன்பானவள். அழகானவள். அவள் கைக்குழந்தையாக இருந்தபோதே சந்திரசேகரனை அவரது மனைவி பரமேஸ்வரி விவாகரத்து மூலம் பிரிந்து சென்று தொழில் அதிபர் அமர்நாத்தை மணந்து கொண்டாள். அதன்பிறகு சந்திரசேகரன் தன் மகள் மாயாவே உலகம் என்று வாழ்ந்து வருகிறார். அதோடு அமர்நாத்தின் அத்தனை தொழில்களுக்கும் போட்டி நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்.
நாளுக்கு நாள் போட்டி வலுத்த நிலையில் அமர்நாத் - பரமேஸ்வரியின் மகன் ரமேஷ் ஜெயிலுக்குப் போவதும், மாயா முதல்வர் கையால் விருது வாங்குவதும் ஒரே நாளில் நடக்கிறது. தான் தோற்றுவிட்டதாய் ஆத்திரப்படும் பரமேஸ்வரி, சந்திரசேகரனை நடுத்தெருவில் நிறுத்தி மாயாவை தன் பக்கம் கொண்டு வருவேன் என சபதம் எடுக்கிறாள். பரமேஸ்வரியின் சபதம் வென்றதா? சந்திரசேகரனின் லட்சியம் வென்றதா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.