தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை | கண்ணப்பா சம்பள விஷயத்தில் விஷ்ணு மஞ்சுவை மிரட்டிய மோகன்லால், பிரபாஸ் |
புத்தம் புதிய நிகழ்ச்சிகளையும், தொடர்களையும், ரியாலட்டி ஷோக்களையும் சுவாரஸ்யமாகவும், புதுமையாகவும் வழங்கி வருகிறது கலர்ஸ் தமிழ் சேனல். கடந்த 24ம் தேதி முதல் நகுல், ஓவியா, பிருந்தா ஆகியோர்களை நடுவர்களாக கொண்ட டான்ஸ் நிகழ்ச்சியை புதிதாக தொடங்கி உள்ள நிலையில் தற்போது ஓவியா என்கிற புதிய தொடரை ஒளிபரப்புகிறது.
ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பெண்ணாக இருப்பினும் ஓவியா, அவளது கோட்பாடுகளையும், சித்தாந்தங்களை பின்பற்றுவதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறாள். சுற்றியுள்ள அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் அவள், அவளது கனிவான நடத்தைக்காகவும், நேர்மைக்காகவும் பலரால் பாராட்டப்படுகிறாள்.
இதற்கு மாறாக வசதியான குடும்பத்தைச் சேர்ந்த காயத்ரியோ தனது இலக்குகளையும், இலட்சியங்களையும் அடைவதற்காக எந்தளவுக்கும் மோசமாக செல்வதற்கு தயாராக இருப்பதோடு பிறரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முற்படுபவளாக இருக்கிறாள். இருப்பதில் திருப்திகொள்ளும் நபராக ஓவியா இருக்கின்றபோது, எந்த நேரமும் மகிழ்ச்சியைத் தேடி அலைபவளாக காயத்ரி இருக்கிறாள்.
இந்த இரு இளம்பெண்களின் கதையும் மற்றும் அவர்களது காதல் உணர்வுகளினால் அவர்களுக்கிடையே ஏற்படும் பிளவும் இந்த கதையின் மையக்கருவாக அமைந்திருக்கிறது.
நவம்பர் 26 ஆம் தேதி இன்று முதல் தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியானது, தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணியிலிருந்து 7 மணி வரை ஒளிபரப்பாகிறது.