ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புத்தம் புதிய நிகழ்ச்சிகளையும், தொடர்களையும், ரியாலட்டி ஷோக்களையும் சுவாரஸ்யமாகவும், புதுமையாகவும் வழங்கி வருகிறது கலர்ஸ் தமிழ் சேனல். கடந்த 24ம் தேதி முதல் நகுல், ஓவியா, பிருந்தா ஆகியோர்களை நடுவர்களாக கொண்ட டான்ஸ் நிகழ்ச்சியை புதிதாக தொடங்கி உள்ள நிலையில் தற்போது ஓவியா என்கிற புதிய தொடரை ஒளிபரப்புகிறது.
ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பெண்ணாக இருப்பினும் ஓவியா, அவளது கோட்பாடுகளையும், சித்தாந்தங்களை பின்பற்றுவதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறாள். சுற்றியுள்ள அனைவராலும் அதிகம் நேசிக்கப்படும் அவள், அவளது கனிவான நடத்தைக்காகவும், நேர்மைக்காகவும் பலரால் பாராட்டப்படுகிறாள்.
இதற்கு மாறாக வசதியான குடும்பத்தைச் சேர்ந்த காயத்ரியோ தனது இலக்குகளையும், இலட்சியங்களையும் அடைவதற்காக எந்தளவுக்கும் மோசமாக செல்வதற்கு தயாராக இருப்பதோடு பிறரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முற்படுபவளாக இருக்கிறாள். இருப்பதில் திருப்திகொள்ளும் நபராக ஓவியா இருக்கின்றபோது, எந்த நேரமும் மகிழ்ச்சியைத் தேடி அலைபவளாக காயத்ரி இருக்கிறாள்.
இந்த இரு இளம்பெண்களின் கதையும் மற்றும் அவர்களது காதல் உணர்வுகளினால் அவர்களுக்கிடையே ஏற்படும் பிளவும் இந்த கதையின் மையக்கருவாக அமைந்திருக்கிறது.
நவம்பர் 26 ஆம் தேதி இன்று முதல் தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியானது, தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணியிலிருந்து 7 மணி வரை ஒளிபரப்பாகிறது.