இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
புத்தம் புது தொடர்களை பிரமாண்டமாக சினிமா தரத்தில் தந்து கொண்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் சேனல். அந்த வரிசையில் அடுத்து வருகிறது ஓவியா என்ற தொடர். இது சென்னை கடற்கரையை ஒட்டிய மீனவர்களின் வாழ்வியலை சொல்லப்போகிற யதார்த்த தொடர்.
சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மீனவர் குப்பத்தை சேர்ந்தவள் ஓவியா.
படிப்பில் அவள் ரொம்ப புத்திசாலி. அதனால் ஊருக்கே அவள் செல்லப்பிள்ளை. அவள் 12ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக தேர்வாகிறாள். அரசு பள்ளியில் படித்து முதல் மாணவியாக தேர்வாவதால் நாடே அவரை கொண்டாடுகிறது. குப்பத்து மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை... அது ஏன் என்பதுதான் தொடரின் திரைக்கதை.
வருகிற 26ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. இன்றைய கல்வி முறையை சாடும் ஒரு அரசியல் கலந்த சமூக தொடராக ஓவியாக ஒளிபரப்பாக இருக்கிறது.