தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை | கண்ணப்பா சம்பள விஷயத்தில் விஷ்ணு மஞ்சுவை மிரட்டிய மோகன்லால், பிரபாஸ் | மோகன்லால், மம்முட்டி படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை இயக்க தயாராகும் விஸ்வரூபம் எடிட்டர் | முக்கிய காட்சிகள் கட், பாம்புடன் வந்த ரசிகர் : கலீஜா ரீ ரிலீஸ் கலாட்டா |
புத்தம் புது தொடர்களை பிரமாண்டமாக சினிமா தரத்தில் தந்து கொண்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் சேனல். அந்த வரிசையில் அடுத்து வருகிறது ஓவியா என்ற தொடர். இது சென்னை கடற்கரையை ஒட்டிய மீனவர்களின் வாழ்வியலை சொல்லப்போகிற யதார்த்த தொடர்.
சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மீனவர் குப்பத்தை சேர்ந்தவள் ஓவியா.
படிப்பில் அவள் ரொம்ப புத்திசாலி. அதனால் ஊருக்கே அவள் செல்லப்பிள்ளை. அவள் 12ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக தேர்வாகிறாள். அரசு பள்ளியில் படித்து முதல் மாணவியாக தேர்வாவதால் நாடே அவரை கொண்டாடுகிறது. குப்பத்து மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை... அது ஏன் என்பதுதான் தொடரின் திரைக்கதை.
வருகிற 26ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. இன்றைய கல்வி முறையை சாடும் ஒரு அரசியல் கலந்த சமூக தொடராக ஓவியாக ஒளிபரப்பாக இருக்கிறது.