80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா' | ரம்பாவுக்குப் பிறகு ரகுல் ப்ரீத்…இப்படி ஒரு கிளாமர் !! | நவம்பர் 7ல் சிறிய படங்களின் வெளியீடுகள் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட அறிவிப்புக்கு பிரம்மாண்ட விழா | இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை |

புத்தம் புது தொடர்களை பிரமாண்டமாக சினிமா தரத்தில் தந்து கொண்டிருக்கிறது கலர்ஸ் தமிழ் சேனல். அந்த வரிசையில் அடுத்து வருகிறது ஓவியா என்ற தொடர். இது சென்னை கடற்கரையை ஒட்டிய மீனவர்களின் வாழ்வியலை சொல்லப்போகிற யதார்த்த தொடர்.
சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள மீனவர் குப்பத்தை சேர்ந்தவள் ஓவியா.
படிப்பில் அவள் ரொம்ப புத்திசாலி. அதனால் ஊருக்கே அவள் செல்லப்பிள்ளை. அவள் 12ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக தேர்வாகிறாள். அரசு பள்ளியில் படித்து முதல் மாணவியாக தேர்வாவதால் நாடே அவரை கொண்டாடுகிறது. குப்பத்து மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை... அது ஏன் என்பதுதான் தொடரின் திரைக்கதை.
வருகிற 26ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. இன்றைய கல்வி முறையை சாடும் ஒரு அரசியல் கலந்த சமூக தொடராக ஓவியாக ஒளிபரப்பாக இருக்கிறது.