கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி. கடந்த ஒரு ஆண்டாக ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தான் இந்த ஆண்டு சிறந்த சீரியலுக்கான விஜய் அவார்டையும் பெற்றது.
இந்த நிலையில் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்த பவித்ராவும், வினோதினி என்கிற முக்கியமான கேரக்டரில் நடித்து வந்த வைஷாலியும் விலகியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இரு நடிகைகள் விலகி இருப்பது ராஜா ராணி சீரியல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வைஷாலிக்கு உடல்நல பிரச்சினை இல்லை என்றும், அவர் 3 மாதம் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்ற டாக்டர்கள் கூறியதால் அவர் விலகியதாக கூறப்படுகிறது. பவித்ரா இதே சேனலில் ஒளிபரப்பாகும் இன்னொரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது.
இருவர் விலகினாலும் அவர்கள் நடித்து வந்த கேடக்டர்கள் தொடர்கிறது. இவர்களுக்கு பதிலாக வேறு நடிகைகள் நடிப்பார்கள் என்கிறது சீரியல் தரப்பு. வைஷாலி, பவித்ரா இடத்தை புதியவர்கள் நிரப்புவார்களா? என்பது போகப் போகத்தான் தெரியும்.