ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
தெலுங்கு படங்களில் வில்லி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் சனா. தமிழில் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்தார். வஜ்ரம் என்ற படத்தில் கொடூர வில்லியாக நடித்தார். இன்னும் சில படங்களிலும் நடித்தார். தமிழில் குறைவாக நடித்திருந்தாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 500 படங்கள் வரை நடித்திருக்கிறார். தற்போது சனா சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
விரைவில் விஜய் டி.வியில் ஒளிபரப்பாக உள்ள ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் சனா. இதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டு தற்போது நடித்து வருகிறார். சின்னத்திரை சீரியலில் நடிப்பது பற்றி சனா கூறியதாவது:
நிறைய படங்களில் நான் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் நடித்தால் இன்னும் பல மக்களுக்கு சென்று சேரலாம் என்று நண்பர்கள் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். எனக்கும் அது சரி என்று பட்டது. சீரியல் கதை கேட்டேன். 20 கதைகள் வரை கேட்டு கடைசியாக முடிவு செய்தது தான் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தன் குடும்பத்தின் நலனுக்காக எதையும் செய்யத் துணிகிற ஒரு பெண் கேரக்டரில் நடிக்கிறேன். மற்றவர்களுக்கு நான் செய்வது வில்லித்தனமாக தெரியலாம். ஆனால் எனக்கு அதுதான் நியாயமாக இருக்கும். இப்படியான பவர்புல் கேரக்டர் அது. சின்னத்திரையில் நடிக்க தொடங்கிவிட்டாலும் நல்ல வாய்ப்புகள் வந்தால் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் சனா.