மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் நெஞ்சம் மறப்பதில்லை. தற்போது விஜய் டி.வி வித்தியாசமான தொடர்களை பிரமாண்டமாக ஒளிபரப்புகிறது. பாகுபலி பிரமாண்டத்தில் தமிழ் கடவுள் முருகன் தொடரை ஒளிபரப்புகிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் சின்னத்தம்பியை ஒளிபரப்புகிறது. அந்த வரிசையில் நெஞ்சம் மறப்பதில்லை குளுகுளு கொடைக்கானில் நடக்கிறது.
இதில், காதல் முதல் கல்யாணம் வரை புகழ் அமித் பார்கவ் ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் சரண்யா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர நிஷா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். அமித் பார்கவ் கொடைக்கானலுக்கு புதிய போலீஸ் அதிகாரியாக வருகிறார். கொடைக்கானில் ஒரு காலத்தில் அவர் காதலை நிராகரித்த சரண்யா இருக்கிறார். இவர் வந்த நேரம் சரண்யாவின் தந்தை விபத்தில் இறந்து போகிறார். அவரும் ஒரு போலீஸ் அதிகாரிதான். சரண்யா அமித் பார்கவ் மீது சந்தேகம் கொள்கிறார். இப்படி தொடங்குகிறது சீரியல். காதல் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லரா தயாராகிறது சீரியல். வருகிற 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு பிரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.




