ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
துணிச்சலான, புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் டி.வி என்றைக்குமே முன்னணியில் இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து அறிமுகப்படுத்துகிறது திரிலிங்கான யெஸ் ஆர் நோ என்கிற கேம் ஷோவை.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர் ஒரு காரியத்தை செய்வார். பார்வையாளர்களாக இருக்கிறவர்கள் அவர் அதை செய்வாரா மாட்டாரா என்பதை யெஸ் ஆர் நோ சொல்லி தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக ஒரு சிறுமியின் தலையில் ஆப்பிளை வைத்து அதனை தூரத்திலிருந்து ஒருவர் அம்பால் அந்த ஆப்பிளை உடைப்பார் என்பது போட்டி. இது அவரால் முடியுமா முடியாதா என்பது எஸ் ஆர் நோவுக்கான விஷயம். இப்படி 128 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்களிலிருந்து ஒருவர் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு பெருந் தொகை பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி நாளை (23ந் தேதி) தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனை பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் சினிமா நடிகர் ஜெகன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் பல துறைகளில் சாதனை படைத்த நான்கு நட்சத்திர வீரர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.