ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
துணிச்சலான, புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் டி.வி என்றைக்குமே முன்னணியில் இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து அறிமுகப்படுத்துகிறது திரிலிங்கான யெஸ் ஆர் நோ என்கிற கேம் ஷோவை.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர் ஒரு காரியத்தை செய்வார். பார்வையாளர்களாக இருக்கிறவர்கள் அவர் அதை செய்வாரா மாட்டாரா என்பதை யெஸ் ஆர் நோ சொல்லி தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக ஒரு சிறுமியின் தலையில் ஆப்பிளை வைத்து அதனை தூரத்திலிருந்து ஒருவர் அம்பால் அந்த ஆப்பிளை உடைப்பார் என்பது போட்டி. இது அவரால் முடியுமா முடியாதா என்பது எஸ் ஆர் நோவுக்கான விஷயம். இப்படி 128 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்களிலிருந்து ஒருவர் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு பெருந் தொகை பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி நாளை (23ந் தேதி) தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனை பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் சினிமா நடிகர் ஜெகன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் பல துறைகளில் சாதனை படைத்த நான்கு நட்சத்திர வீரர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.