பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடித்த படம் டோரா. சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கினார். மாயா படத்தின் வெற்றிக்கு பிறகு அதே பாணியிலான திகில் பேய் படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. அவருடன் தம்பி ராமய்யா, ஹரிஷ் உத்தமன், சுனில்குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். விவேக், மெர்வின் இசை அமைத்திருந்தனர்.
சிறுமியை பலவந்தப்படுத்திய ஒரு கொடூரமான கும்பலை, காருக்குள் புகுந்த நாயின் ஆவி ஒன்று நயன்தாரா மூலமாக பழிவாங்குவது தான் கதை. மாயா அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும், ஓரளவுக்கு ஓடிய படம். கடந்த மார்ச் மாதம் 31ந் தேதி வெளிவந்த இந்தப் படம் 5 மாதங்களுக்கு பிறகு சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 17ந் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது.