'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நடித்த படம் டோரா. சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கினார். மாயா படத்தின் வெற்றிக்கு பிறகு அதே பாணியிலான திகில் பேய் படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. அவருடன் தம்பி ராமய்யா, ஹரிஷ் உத்தமன், சுனில்குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். விவேக், மெர்வின் இசை அமைத்திருந்தனர்.
சிறுமியை பலவந்தப்படுத்திய ஒரு கொடூரமான கும்பலை, காருக்குள் புகுந்த நாயின் ஆவி ஒன்று நயன்தாரா மூலமாக பழிவாங்குவது தான் கதை. மாயா அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும், ஓரளவுக்கு ஓடிய படம். கடந்த மார்ச் மாதம் 31ந் தேதி வெளிவந்த இந்தப் படம் 5 மாதங்களுக்கு பிறகு சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 17ந் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது.




