மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தலைப்புகள் பஞ்சம் தமிழ் சினிமாவில் மட்டும்தான் தலைவிரித்து ஆடுகிறது என்று பார்த்தால் டிவிக்களில் ஏற்கெனவே ஆடிக் கொண்டிருக்கிறது. பல டிவி தொடர்களின் தலைப்புகள் வெற்றிகரமாக ஓடிய தமிழ்த் திரைப்படங்களின் தலைப்புகளாக வைக்கப்பட்டு வருகின்றன. இதை யாருமே தட்டிக் கேட்டதாகத் தெரியவில்லை. மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த சில படங்களின் பெயர்கள், குப்பையான டிவி தொடர்களுக்கும், டப்பிங் தொடர்களுக்கும் வைக்கப்பட்டு அந்தப் படங்களின் ஞாபகத்தையே கெடுத்துவிடுகின்றன.
படத்திற்கு தலைப்பு வைப்பதற்கு எப்படி ஒரு வரைமுறை இருக்கிறதோ, அதே போல டிவி தொடர்களுக்கு பெயர் வைப்பதிலும் பின்பற்றலாம். ஆனால், பல தொலைக்காட்சி நிறுவனங்கள் அதைப் பின்பற்றுவதேயில்லை. ஏற்கெனவே வெளிவந்த படங்களின் பெயரை வைத்தவர்கள் இப்போது வெளிவர உள்ள படங்களின் பெயரையும் வைத்து வர உள்ள அந்தப் படங்களின் இமேஜையும் ஒருவழி செய்து விடுவார்கள் போலிருக்கிறது.
செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இந்தப் பெயருடன் விஜய் டிவியில் விரைவில் ஒரு தொடர் ஒளிபரப்பாக உள்ளது. அந்த அளவிற்கு தலைப்பு வைப்பதற்கும் கூட கற்பனைப் பஞ்சம் வந்துவிட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம்.




