ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் |
தலைப்புகள் பஞ்சம் தமிழ் சினிமாவில் மட்டும்தான் தலைவிரித்து ஆடுகிறது என்று பார்த்தால் டிவிக்களில் ஏற்கெனவே ஆடிக் கொண்டிருக்கிறது. பல டிவி தொடர்களின் தலைப்புகள் வெற்றிகரமாக ஓடிய தமிழ்த் திரைப்படங்களின் தலைப்புகளாக வைக்கப்பட்டு வருகின்றன. இதை யாருமே தட்டிக் கேட்டதாகத் தெரியவில்லை. மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த சில படங்களின் பெயர்கள், குப்பையான டிவி தொடர்களுக்கும், டப்பிங் தொடர்களுக்கும் வைக்கப்பட்டு அந்தப் படங்களின் ஞாபகத்தையே கெடுத்துவிடுகின்றன.
படத்திற்கு தலைப்பு வைப்பதற்கு எப்படி ஒரு வரைமுறை இருக்கிறதோ, அதே போல டிவி தொடர்களுக்கு பெயர் வைப்பதிலும் பின்பற்றலாம். ஆனால், பல தொலைக்காட்சி நிறுவனங்கள் அதைப் பின்பற்றுவதேயில்லை. ஏற்கெனவே வெளிவந்த படங்களின் பெயரை வைத்தவர்கள் இப்போது வெளிவர உள்ள படங்களின் பெயரையும் வைத்து வர உள்ள அந்தப் படங்களின் இமேஜையும் ஒருவழி செய்து விடுவார்கள் போலிருக்கிறது.
செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இந்தப் பெயருடன் விஜய் டிவியில் விரைவில் ஒரு தொடர் ஒளிபரப்பாக உள்ளது. அந்த அளவிற்கு தலைப்பு வைப்பதற்கும் கூட கற்பனைப் பஞ்சம் வந்துவிட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம்.