முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பகல் நிலவு தொடரில் ஜோடியாக நடித்து வருகிறவர்கள் சமீராவும், அன்வரும். இருவரும் நிஜத்திலும் காதலர்கள். தற்போது இருவரும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் றெக்க கட்டி பறக்குது மனசு என்ற தொடரை தயாரித்து ஒளிபரப்புகிறார்கள். இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். சமீரா ஹீரோயினாக நடிக்கிறார். அன்வர் தயாரிப்பு பணிகளை கவனித்துக் கொள்கிறார்கள்.
இந்த தொடர் மராட்டி மொழியில் ஒளிபரப்பான ஒரு காதல் தொடரின் ரீமேக் ஆகும். இதன் படப்பிடிப்புகள் தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கான புரமோ பாடலை சினிமா பாடலுக்கு நிகராக படம் பிடித்திருக்கிறார்கள். இந்த தொடர் வருகிற 19ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. திருமணமே வேண்டாம் என்று இருக்கும் ஒரு ஆஞ்சநேய பக்தனுக்கும், மனசெல்லாம் காதல் நிறைந்திருக்கும் ஒரு டீச்சருக்குமான காதல் கதை இது.