ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
சமீபத்தில் திரைக்கு வந்த ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் ஆலியா மானசா. அதைத் தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் அவரோ, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் என்ட்ரியானது குறித்து அவர் கூறுகையில், ஜூலியும் நான்கு பேரும் படத்திற்கு பிறகு தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் விஜய் டிவிக்காக ராஜா ராணி தொடரில் நாயகியாக நடிக்க என்னை அழைத்தனர். அந்த சீரியலை இயக்குவது சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை சீரியல்களை இயக்கிய பிரவீண் பென்னட் என்பதால் என்னால் அந்த வாய்ப்பை நழுவ விடமுடியவில்லை. அவர் ஒரு நல்ல இயக்குனர் என்பதினால் ராஜா ராணி தொடரில் கமிட்டாகி விட்டேன்.
இந்த தொடரில் நான் நடிக்கும் செம்பருத்தி கேரக்டர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண். அந்த வீட்டு முதலாளி என்னை தனது பெண்ணாகவே நினைக்கிறார். அப்போது அவரது மகனான ஹீரோ சிங்கப்பூரில் இருந்து என்ட்ரி ஆகிறார். என்னை அவருக்கு பிடித்து விடுகிறது, திருமணம் நடக்கிறது. ஆனால் அவருக்கு சிங்கப்பூரில் ஒரு லவ் இருந்திருக்கிறது. இந்த நிலையில் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. முதலில் அப்பாவி பெண்ணாக இருக்கும் நான் பின்னர் போல்டான பெண்ணாக மாறுகிறேன். பர்பாமென்ஸ் பண்ண நல்ல ஸ்கோப் உள்ளது.
மேலும், தொடர்ந்து நான் சீரியல்கள் பண்ணுவேன் என்று சொல்ல முடியாது. லீடு ரோல்கள் வந்தால் நடிப்பேன். மற்றபடி சினிமாவிலும் நடிப்பேன். சில படங்கள் வருகின்றன. ஆனால் ஒரு ஆறு மாதம் கழித்துதான் அந்த படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன் என்கிறார் ஆலியா மானசா.