மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

நித்தியானந்தம் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் தொடர் சுமங்கலி. திவ்யா லீடு ரோலில் நடித்து வரும் இந்த தொடரில் பிரதீப் நாயகனாக நடித்து வந்தார். ஆனால் கடந்த மாதம் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதையடுத்து கதாநாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லாமலேயே சுமங்கலி தொடரின் எபிசோடுகள் நகர்த்தப்பட்டு வந்தன. அதோடு, பிரதீப் நடித்த கதாபாத்திரத்தில் எந்த நடிகரை நடிக்க வைக்கலாம் என்கிற பரிசீலணையும் நடந்து வந்தது. இந்த நிலையில், தற்போது சுஜித் என்ற கன்னட சீரியல் நடிகர் சுமங்கலி தொடரில் பிரதீப் நடித்து வந்த கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.




