'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் டிடி நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் சிவகார்த்திகேயன், 2-வது வாரத்தில் ஆர்யா, 3-வது வாரத்தில் விஜய்சேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நிலையில், வருகிற சனிக்கிழமை நடிகை ரேவதி கலந்து கொள்கிறார். அந்த எபிசோடின் படப்பிடிப்பு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள செட்டில் படமாக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராஜ்கிரண்-ரேவதி ஆகிய இருவரும்தான் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் ராஜ்கிரணுக்கு உடல்நிலை சரியில்லாதததால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தனர். மேலும், வெளியில் தெரியாமல் சமூக சேவை செய்து வரும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வெளிச்சம் போட்டுகாட்டும் இந்த நிகழ்ச்சியில், அடுத்தடுத்து இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுநலம் கொண்ட சாமானியர்களை வெளிச்சத்துக் கொண்டு வருகிறார்களாம். இந்த நிகழ்ச்சியில் என்னதான் திரை பிரபலங்கள் கலந்து கொண்டபோதும் சமூக சேவையாற்றும் நபர்களை முன்னிறுத்திதான் இந்த நிகழ்ச்சி நடத்துப்படுமாம். அதோடு, 13 எபிசோடு இதே பாணியில் செல்ல, அதற்கடுத்து இன்னும் புதிய கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம்.