மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பல திரைப்படங்களை இயக்கி விட்டு சின்னத்திரைக்கு வந்தவர் சுந்தர்.கே விஜயன். செல்வி, அலைகள் உள்ளிட்ட தொடர்களை இயக்கினார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் இயக்கும் தொடர் விண்ணைத்தாண்டி வருவாயா?. சரத்குமார் புதிதாக தொடங்கி உள்ள ஐ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் தொடர். தொடர் பற்றி அவர் கூறியிருப்பதாவது:
சரத்குமார் சார் தயாரிக்கும் முதல் தொடரை இயக்குவது சந்தோஷமாக உள்ளது. அவரது நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. நான் இயக்கிய முந்தைய தொடர்களின் சாயல் எதுவும் இதில் இருக்காது. முந்தைய தொடர்களில் செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் இருந்தது. இந்த தொடரில் காதலுக்கும், இசைக்கும் முக்கியத்துவம் இருக்கும். எனக்கு தெரிந்து இசையை பின்புலகமாக கொண்டு வரும் முதல் தமிழ் தொடர் இதுதான் என்று நினைக்கிறேன்.
இசையுலகில் சாதிக்கத் துடிக்கும் ஒருவனுக்கு காதல் எந்த அளவுக்கு கைகொடுக்கிறது என்பதுதான் கதையின் ஒண்லைன். தயாரிப்பாளர் சரத்குமார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அதை நான் சரியாக பயன்படுத்துவேன். விஜய் டிவியல் ஏற்கெனவே காதல் தொடர்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது. தற்போதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து இந்த தொடர் நிச்சயம் வித்தியாசப்படும். என்கிறார் சுந்தர் கே.விஜயன்.




