ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
பல திரைப்படங்களை இயக்கி விட்டு சின்னத்திரைக்கு வந்தவர் சுந்தர்.கே விஜயன். செல்வி, அலைகள் உள்ளிட்ட தொடர்களை இயக்கினார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் இயக்கும் தொடர் விண்ணைத்தாண்டி வருவாயா?. சரத்குமார் புதிதாக தொடங்கி உள்ள ஐ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் தொடர். தொடர் பற்றி அவர் கூறியிருப்பதாவது:
சரத்குமார் சார் தயாரிக்கும் முதல் தொடரை இயக்குவது சந்தோஷமாக உள்ளது. அவரது நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. நான் இயக்கிய முந்தைய தொடர்களின் சாயல் எதுவும் இதில் இருக்காது. முந்தைய தொடர்களில் செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் இருந்தது. இந்த தொடரில் காதலுக்கும், இசைக்கும் முக்கியத்துவம் இருக்கும். எனக்கு தெரிந்து இசையை பின்புலகமாக கொண்டு வரும் முதல் தமிழ் தொடர் இதுதான் என்று நினைக்கிறேன்.
இசையுலகில் சாதிக்கத் துடிக்கும் ஒருவனுக்கு காதல் எந்த அளவுக்கு கைகொடுக்கிறது என்பதுதான் கதையின் ஒண்லைன். தயாரிப்பாளர் சரத்குமார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அதை நான் சரியாக பயன்படுத்துவேன். விஜய் டிவியல் ஏற்கெனவே காதல் தொடர்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது. தற்போதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து இந்த தொடர் நிச்சயம் வித்தியாசப்படும். என்கிறார் சுந்தர் கே.விஜயன்.