நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் |
தெலுங்கு சேனலான ஜெமினியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ரக்ஷா பந்தா. இந்த நிகழ்ச்சியை நடிகை ரோஜா தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும். அதற்கு தீர்வு காண முடியாமல் தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் பேசி, அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி தீர்வு காணும் நிகழ்ச்சி.
இப்போது தமிழில் அப்படியே ரீமேக் செய்கிறார்கள். நிஜங்கள் என்ற தலைப்பில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தொகுத்து வழங்குகிறார். முன்னணி சேனலில் தினமும் 12.30 மணியிலிருந்து 1.30 மணி வரை ஒளிபரப்பாகிறது. விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் தேர்வும், தேர்வு பெற்றவர்களுக்கான படப்பிடிப்பும் நடந்து வருகிறது. விரைவில் இது ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் இன்னோரு வடிவம்தான் நிஜங்கள்.