திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் |
டப்பிங் சீரியல்களை காவிய நேரம் என்ற தலைப்பில் சகட்டுமேனிக்கு ஒளிபரப்பி வரும் விஜய் டி.வி. அடுத்து ஒரு யூத்புல்லான நேரடி தமிழ் தொடரை ஒளிபரப்ப இருக்கிறது. நடிகர் சரத்குமார் இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார். பல திரைப்படங்களையும், டி.வி. தொடர்களையும் இயக்கிய சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார்.
ஆபீஸ், தாயுமானவன், அச்சம் தவிர் தொடர்கள் மற்றும் மாப்ளசிங்கம், ரோமியோ ஜூலியட், பூஜை திரைப்படங்களில் நடித்திருக்கும் மதுமிலா ஹீரோயினாக நடிக்கிறார். நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த விக்ரம் தொடரின் ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர பிரியமானவள் தொடரில் நடித்து வரும் கிரிதரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"விண்ணைத்தாண்டி வருவாயா யூத்புல்லான ஒரு காதல் கதை, அழுதுவடியும் சீரியல்களும் பயறுமுத்தும் மாந்த்ரீக சீரியல்களும் பெருகியிருக்கும் இந்த நேரத்தில் பார்த்து, ரசிக்க, சுவைக்க தகுந்த சீரியலாக விண்ணைத்தாண்டி வருவாயா உருவாகி இருக்கிறது" என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. வருகிற 3ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.