அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
விஜய் டிவியின் நம்பர்-ஒன் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய, காபி வித் டிடி, ஜோடி நம்பர்-ஒன், விஜய் அவார்ட்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன. அந்த வகையில் 12 வருடங்களாக விஜய் டிவியின் பிரதான தொகுப்பாளினியாக இருந்த டிடியின் காபி வித் டிடி நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, அவர் அந்த டிவியில் இருந்தே விலகி விட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த டிடி, மீண்டும் நான் விஜய் டிவியில் பிஸியாவேன் என்று கூறி வந்தார். அதற்கேற்ப தற்போது காபி வித் டிடி மட்டுமின்றி, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் டிடி அடுத்தபடியாக அச்சம் தவிர் என்ற நிகழ்ச்சியை வழங்கப்போகிறார். ஜூன் 2-ந்தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், சின்னத்திரை, சினிமா என இரண்டு மீடியாக்களில் உள்ள நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்களாம். டாஸ்க் அடிப்படையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை சேனல்களில் வெளியான ஷோக்களை விட அதிரடியாக இருக்கப்போகிறதாம். இந்நிகழ்ச்சி யில் நெஞ்சை பதபதக்க வைக்கும் போட்டிகளும், பார்வையாளர்களை அச்சுறுத்தும் மோதல்களும் இடம்பெறுகிறதாம். இந்நிகழ்ச்சி திவ்யதர் ஷினிக்கும் ஒரு சவாலான நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார்கள்.