இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு | டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை |
பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் திரைப்படமாகி இருக்கிறது. முதன் முறையாக ஒரு நாவல், சின்னத்திரை சீரியலாகிறது. பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய தலையணை பூக்கள் நாவல் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடராக எடுக்கப்படுகிறது.
பாலகுமாரன் தமிழ் இலக்கிய உலகின் பிரபலமான எழுத்தாளர். 150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய 14 நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. பல படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய குடும்ப நாவல்தான் தலையணை பூக்கள். கிராமத்தில் விசாயம் பொய்த்து விட்டதால் அங்கிருந்து நகரத்து தனது நான்கு மகன்களுடன் பிழைப்பு தேடி சென்னை வரும் விவசாயி இங்கு தன் மனைவி பெயரில் லட்சுமி அண்ட் கோ என்ற பாத்திர கடை தொடங்குகிறார். மகன்களின் உழைப்பால் அது பெரிய நிறுவனமாக வளர்கிறது. அந்த வீட்டுக்கு மருமகள்கள் வரும்போது என்ன மாற்றங்கள் நடக்கிறது. என்பதுதான் கதை. தனித்தனியாக பிரியும் சகோதரர்கள், போட்டி நிறுவனங்கள் தொடங்குவது. ஒருரை வீழ்த்து ஒருவர் நினைப்பது என பணம் வந்த பிறகு பாசம் பறந்து போன கதையாக விரியும்.
இதில் குடும்ப தலைவராக டெல்லி குமார் நடிக்கிறர். மகன்களாக ஸ்ரீ, ஸ்ரீகர் நடிக்கிறார்கள். முதல் மருமகளாக நிஷா நடிக்கிறார். வருகிற 23ந் தேதி முதல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.