தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
மகாபாரதம் தொடரில் திரவுபதியாக நடித்து புகழ்பெற்றவர் நிஷா கிருஷ்ணன். மகாபாரதம் தொடரின் இறுதி பகுதி எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் மகாபாரம் தொடர் நிறைவடைகிறது. இந்த நிலையில் நிஷா கிருஷ்ணன் தலையணை பூக்கள் என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது நடித்து வருகிறார்.
எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவலை அதே பெயரில் தொடராக உருவாக்குகிறார்கள். காஞ்சிபுரம் பின்னணயில் நடக்கிற கதை. பட்டு நெசவு தொழில், தங்க நகை தொழிலாளர்களின் பின்னணியில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திலும், அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. ராம்குமார் இயக்குகிறார். நிஷா கிருஷ்ணன் சமீபத்தில் திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்கும் தொடர் தலையணை பூக்கள்.