ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மகாபாரதம் தொடரில் திரவுபதியாக நடித்து புகழ்பெற்றவர் நிஷா கிருஷ்ணன். மகாபாரதம் தொடரின் இறுதி பகுதி எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் மகாபாரம் தொடர் நிறைவடைகிறது. இந்த நிலையில் நிஷா கிருஷ்ணன் தலையணை பூக்கள் என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது நடித்து வருகிறார்.
எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவலை அதே பெயரில் தொடராக உருவாக்குகிறார்கள். காஞ்சிபுரம் பின்னணயில் நடக்கிற கதை. பட்டு நெசவு தொழில், தங்க நகை தொழிலாளர்களின் பின்னணியில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திலும், அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. ராம்குமார் இயக்குகிறார். நிஷா கிருஷ்ணன் சமீபத்தில் திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்கும் தொடர் தலையணை பூக்கள்.