Advertisement

சிறப்புச்செய்திகள்

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி

17 ஏப், 2021 - 06:11 IST
எழுத்தின் அளவு:
Actor-Vivek-body-cremated-:-Fans-pay-their-last-respect-with-plant

மறைந்த நடிகர் விவேக்கின் உடல் அரசு மரியாதை உடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் மரக்கன்றுகளை ஏந்தி சென்று அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் உயிர் காக்கும், எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று(ஏப்., 17) காலை 4.35 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் மறைந்த செய்தி அறிந்து, காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். அதிலும் கொரோனா காலம் என்பதையும் மக்கள் பொருட்படுத்தாமல் கூட்டமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தாலும் மக்கள் மனதில் எவ்வளவு பெரிய ஹீரோவாக அவர் திகழ்ந்துள்ளார் என்பதை இன்றைக்கு அவருக்கு அஞ்சலி செலுத்து வந்த மக்கள் கூட்டத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

அரசியல் தலைவர்கள் இரங்கல், அஞ்சலி

பிரதமர், துணை ஜனாதிபதி, முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். திமுக., சார்பில் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். வைகோ, பிரமேலதா விஜயகாந்த், சுதீஷ், சீமான், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.



திரையுலகினர் இரங்கல், அஞ்சலி
மயில்சாமி, ஆடுகளம் நரேன், சூர்யா, ஜோதிகா, கார்த்தி, ஆர்.பாண்டியராஜன், சதீஷ், எம்.எஸ்.பாஸ்கர், சூரி, நாசர், போண்டா மணி, ஜாக்குவார் தங்கம், யோகிபாபு, அந்தோணிசாசன், தாமு, கவுண்டமணி, வைரமுத்து, வையாபுரி, சரத்குமார், டாக்டர் சீனிவாசன், சார்லி, ஆர்த்தி, கணேஷ், பிரியா பவானி சங்கர், திரிஷா, லிங்குசாமி, கஞ்சா கருப்பு, சரண், இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம், லோகேஷ் கனகராஜ், அருண் விஜய், சந்தானம், கார்த்திக் சுப்பராஜ், லொள்ளு சபா சாமிநாதன், அர்ஜுன், சரஸ்வதி, குஷ்பு, காமெடி நடிகர் புகழ், பாபி சிம்ஹா, தம்பி ராமைய்யா, சிங்கம் புலி, ஹிப் ஹாப் ஆதி, ஈரோடு மகேஷ், ரோபோ சங்கர், மிர்ச்சி சிவா, ஹரிஷ் கல்யாண், ரமேஷ் கண்ணா, ஆர்.கே.செல்வமணி, சசிகுமார், சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய்சேதுபதி, இமான் அண்ணாச்சி, விஜய் ஆண்டனி, சந்தானம், அர்ஜுன் தாஸ், ஜெய், பி.வாசு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மரக்கன்றுகள் ஏந்தி அஞ்சலி

இதையடுத்து மாலை 4 மணிக்கு மேல் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுக அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பலர் அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றபோது மரக்கன்றுகளை ஏந்தி சென்றனர்.




அரசு மரியாதையுடன் தகனம்

பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்ட விவேக்கின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் 78 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. விவேக்கின் இளைய மகள் தேஜஸ்வினி இறுதிச்சடங்குகளை செய்தார். பின் அவரின் உடல் மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.



விவேக் இந்த உலகத்தை விட்டு சென்றாலும் அவரின் நகைச்சுவையும், அவர் மக்கள் மனதில் விதைத்த சமூக கருத்துக்களும் என்றும் நினைவில் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் நட்டு வைத்து சென்ற லட்சக்கணக்கான மரக்கன்றுகள் இந்த மண், இயற்கை உள்ள வரை என்றும் அவரது புகழை பேசும். திரையுலகினர், பொதுமக்கள் பலர் சொன்னது போன்று அவரின் ஒரு கோடி மரக்கன்று நடும் பணியை நாம் நிறைவேற்றினால் அதுவே அவருக்கு செய்யும் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்.

இந்த பூமி உள்ள வரை விவேக்கின் புகழ் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம். போய் வாருங்கள் விவேக்!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த விவேக்மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து ... எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)