Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாழ்க்கையில் கிடைத்த திருப்தி! -அஞ்சலி நெகிழ்ச்சி தகவல்

01 ஏப், 2021 - 08:34 IST
எழுத்தின் அளவு:
anjali-shares-about-her-reaction-in-acting-pink-telugu-remake

அங்காடித்தெரு அஞ்சலி கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது. அதையடுத்து தற்போது பிங்க் ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அஞ்சலி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நான் எனது வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் திருப்தி அடைகிறேன். திரைப்படங்களின் எண்ணிக்கையை விட வேலையின் தரத்தை நான் நாடுகிறேன். அதனால் நான் படவாய்ப்புகளுக்காக தயாரிப்பாளர்களின் பின்னால் ஓடவில்லை. எனக்கேற்ற நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வரும் என்று வெயிட் பண்ணுகிறேன்.


மேலும், பிங்க் ஹிந்தி அப்படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்கவில்லை. ஆனால் பிங்க் படத்தை பார்த்திருக்கிறேன். படம் எனக்கு பிடித்தி ருந்தது. தெலுங்கு படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன என்று கூறும் அஞ்சலி, மகேஷ்பாபு, பவன் கல்யாண் போன்ற பெரிய நடிகர்களுடன் பணி புரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் ஒரு மெகா படத்தில் ஒப்பந்த மாகப்போகிறேன். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார் அஞ்சலி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என்ன ஒரு அழகான உணர்வு! - மீனா டுவீட்என்ன ஒரு அழகான உணர்வு! - மீனா டுவீட் சூரரைப்போற்று இந்தி ரீமேக் கைவிடப்பட்டது சூரரைப்போற்று இந்தி ரீமேக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)