ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாகவே இளம் இயக்குனர்களின் ஆதர்ச இயக்குனர்கள் என்றால் அது ஷங்கரும், எஸ்.எஸ்.ராஜமவுலியும் தான். நேரம், பிரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனுக்கு சமீபத்தில் இயக்குனர் ஷங்கரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே பரவசத்தில் இருக்கிறார் மனிதர். 2.O சவுண்ட் மிக்சிங் பணியின் இடைவேளை நேரத்தில், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தான்.
இந்த சந்திப்பு குறித்து அல்போன்ஸ் புத்திரன் கூறும்போது, “என் சின்ன வயதில் என் தந்தை 'ஜென்டில்மேன்' படத்திற்கு முதல்நாள் முதல்காட்சி என்னை அழைத்து சென்றார். அப்போதிலிருந்து இப்போதுவரை ஷங்கரின் படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன். பிரேமம் பட வேலைகளில் இருந்ததால் 'ஐ' படத்தை மட்டும் முதல்நாள் பார்க்க முடியாமல் போனது.
எங்களைப்போன்ற வளரும் இயக்குனர்களுக்கு அவர் தான் தூண்டுதலாகவும் உந்து சக்தியாகவும் இருக்கிறார். தென்னிந்திய சினிமாவை இந்திய அளவிலும், உலக அளவிலும் எடுத்துசென்ற அவர்முன் அமர்ந்து பேசிய அந்த நிமிடங்கள் இப்போது நினைத்தாலும் புத்துணர்வை தருகிறது” என சிலாகித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.