ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

பொதுவாகவே இளம் இயக்குனர்களின் ஆதர்ச இயக்குனர்கள் என்றால் அது ஷங்கரும், எஸ்.எஸ்.ராஜமவுலியும் தான். நேரம், பிரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனுக்கு சமீபத்தில் இயக்குனர் ஷங்கரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே பரவசத்தில் இருக்கிறார் மனிதர். 2.O சவுண்ட் மிக்சிங் பணியின் இடைவேளை நேரத்தில், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தான்.
இந்த சந்திப்பு குறித்து அல்போன்ஸ் புத்திரன் கூறும்போது, “என் சின்ன வயதில் என் தந்தை 'ஜென்டில்மேன்' படத்திற்கு முதல்நாள் முதல்காட்சி என்னை அழைத்து சென்றார். அப்போதிலிருந்து இப்போதுவரை ஷங்கரின் படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன். பிரேமம் பட வேலைகளில் இருந்ததால் 'ஐ' படத்தை மட்டும் முதல்நாள் பார்க்க முடியாமல் போனது.
எங்களைப்போன்ற வளரும் இயக்குனர்களுக்கு அவர் தான் தூண்டுதலாகவும் உந்து சக்தியாகவும் இருக்கிறார். தென்னிந்திய சினிமாவை இந்திய அளவிலும், உலக அளவிலும் எடுத்துசென்ற அவர்முன் அமர்ந்து பேசிய அந்த நிமிடங்கள் இப்போது நினைத்தாலும் புத்துணர்வை தருகிறது” என சிலாகித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.