கூடைப்பந்து வீராங்கனை டூ நடிகை: பன்முகத்திறனுடன் வைஷாலி | ஹாலிவுட் ரேஸ் படங்களில் நடிக்க விரும்பும் அஜித்குமார் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா நாயகன் வில்லனாக மிரட்டிய “நூறாவது நாள்” | நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? |
பொதுவாகவே இளம் இயக்குனர்களின் ஆதர்ச இயக்குனர்கள் என்றால் அது ஷங்கரும், எஸ்.எஸ்.ராஜமவுலியும் தான். நேரம், பிரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனுக்கு சமீபத்தில் இயக்குனர் ஷங்கரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே பரவசத்தில் இருக்கிறார் மனிதர். 2.O சவுண்ட் மிக்சிங் பணியின் இடைவேளை நேரத்தில், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தான்.
இந்த சந்திப்பு குறித்து அல்போன்ஸ் புத்திரன் கூறும்போது, “என் சின்ன வயதில் என் தந்தை 'ஜென்டில்மேன்' படத்திற்கு முதல்நாள் முதல்காட்சி என்னை அழைத்து சென்றார். அப்போதிலிருந்து இப்போதுவரை ஷங்கரின் படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன். பிரேமம் பட வேலைகளில் இருந்ததால் 'ஐ' படத்தை மட்டும் முதல்நாள் பார்க்க முடியாமல் போனது.
எங்களைப்போன்ற வளரும் இயக்குனர்களுக்கு அவர் தான் தூண்டுதலாகவும் உந்து சக்தியாகவும் இருக்கிறார். தென்னிந்திய சினிமாவை இந்திய அளவிலும், உலக அளவிலும் எடுத்துசென்ற அவர்முன் அமர்ந்து பேசிய அந்த நிமிடங்கள் இப்போது நினைத்தாலும் புத்துணர்வை தருகிறது” என சிலாகித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.