நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ |
பொதுவாகவே இளம் இயக்குனர்களின் ஆதர்ச இயக்குனர்கள் என்றால் அது ஷங்கரும், எஸ்.எஸ்.ராஜமவுலியும் தான். நேரம், பிரேமம் புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனுக்கு சமீபத்தில் இயக்குனர் ஷங்கரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் ரொம்பவே பரவசத்தில் இருக்கிறார் மனிதர். 2.O சவுண்ட் மிக்சிங் பணியின் இடைவேளை நேரத்தில், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தான்.
இந்த சந்திப்பு குறித்து அல்போன்ஸ் புத்திரன் கூறும்போது, “என் சின்ன வயதில் என் தந்தை 'ஜென்டில்மேன்' படத்திற்கு முதல்நாள் முதல்காட்சி என்னை அழைத்து சென்றார். அப்போதிலிருந்து இப்போதுவரை ஷங்கரின் படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன். பிரேமம் பட வேலைகளில் இருந்ததால் 'ஐ' படத்தை மட்டும் முதல்நாள் பார்க்க முடியாமல் போனது.
எங்களைப்போன்ற வளரும் இயக்குனர்களுக்கு அவர் தான் தூண்டுதலாகவும் உந்து சக்தியாகவும் இருக்கிறார். தென்னிந்திய சினிமாவை இந்திய அளவிலும், உலக அளவிலும் எடுத்துசென்ற அவர்முன் அமர்ந்து பேசிய அந்த நிமிடங்கள் இப்போது நினைத்தாலும் புத்துணர்வை தருகிறது” என சிலாகித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.