'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் | பாடல்களில் ஆடியே பிரபலமானேன் என்கிறார் தமன்னா | விரைவில் மறுமணம் செய்யப் போகிறாரா சமந்தா | இவர்கள் தான் எனது ரோல் மாடல் என்கிறார் சாந்தனு | நாளை ஓடிடியில் வெளியாகும் அனுஷ்காவின் காட்டி | கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” |
வைதேகி காத்திருந்தாள் படத்தில் வைதேகியாக நடித்தவர் பிரமிளா ஜோஷி, தப்புத் தாளங்கள் படத்தில் சரிதாவின் கணவராக நடித்தவர் சுந்தர் இவர்களின் மகள் மேக்னாராஜ். தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 உள்பட சில படங்களில் நடித்தார். அதன்பிறகு மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தார். கன்னடத்தில் நடிக்கும்போது உடன் நடித்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்தார். சிரஞ்சீவி சார்ஜா நடிகர் அர்ஜுனின் உறவினர்.
ஆரம்பத்தில் இவர்கள் காதலை இருதரப்பு பெற்றோர்களும் ஏற்கவில்லை. இதனால் 3 வருடங்கள் வரை காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை பெங்களூரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. நேற்று காலை பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நடிகர் அர்ஜூன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கன்னட மற்றும் மலையாள திரையுலக பிரமுகர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.