ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? | நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' | பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் | ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி |
வைதேகி காத்திருந்தாள் படத்தில் வைதேகியாக நடித்தவர் பிரமிளா ஜோஷி, தப்புத் தாளங்கள் படத்தில் சரிதாவின் கணவராக நடித்தவர் சுந்தர் இவர்களின் மகள் மேக்னாராஜ். தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 உள்பட சில படங்களில் நடித்தார். அதன்பிறகு மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்தார். கன்னடத்தில் நடிக்கும்போது உடன் நடித்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்தார். சிரஞ்சீவி சார்ஜா நடிகர் அர்ஜுனின் உறவினர்.
ஆரம்பத்தில் இவர்கள் காதலை இருதரப்பு பெற்றோர்களும் ஏற்கவில்லை. இதனால் 3 வருடங்கள் வரை காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை பெங்களூரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. நேற்று காலை பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. நடிகர் அர்ஜூன் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கன்னட மற்றும் மலையாள திரையுலக பிரமுகர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.