ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆரி, ஆஸ்னா ஜவேரி நடித்துள்ள படம் நாகேஷ் திரையரங்கம். டிரான்ஸ்இண்டியா மீடியா என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் ரஜேந்திர எம்.ராஜன், புனிதா ரஜேந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஐசக் என்பவர் இயக்கி உள்ளார். இது ஒரு திரையரங்கை சுற்றி நடக்கிற கதை. இந்தப் படத்துக்கு எதிராக பழம்பெரும் காமெடி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தாவது:
என்னுடைய தந்தை ஒரு பெரிய நடிகர். அவர் தி.நகரில் நாகேஷ் தியேட்டரை நடத்தி வந்தார். அதே பெயரில் படம் எடுத்து வெளியிட இருக்கிறார்கள். நாகேஷ் திரையரங்கம் என்று பெயர் வைப்பதற்காக எங்கள் குடும்பத்தினரிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே அந்தப் படத்தை தடைசெய்ய வேண்டும். எனது தந்தையின் பெயரை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "மனுதாரரின் தந்தை நாகேஷ் தியேட்டர் நடத்தி உள்ளார். ஆனால் எதிர்மனுதாரர் நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். நாகேஷ் தியேட்டர் என்ற பெயரில் எடுக்கவில்லை. இது எந்த வகையிலும் மனுதாரரை பாதிக்காது என்பதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.