சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ்குமார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது விடுதலைப்புலி பிரபாகரன் சம்பந்தப்பட்ட ஒக்கடு மிகிலாடு என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் தயாராகியுள்ள அந்த படத்தை நான் திரும்ப வருவேன் -என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இலங்கையில் நடந்த இறுதிப்போரை மையப்படுத்தி பல படங்கள் வந்தபோதும், அந்த படங்களில் சொல்லப் படாத பல உண்மைகளை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்களாம்.
இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடந்தபோது, இந்த நிகழ்ச்சிக்கு சிம்பு வருவதாக இருந்தது. ஆனால் அவர் ஒரு படப்பிடிப்புக்கு சென்று விட்டார் என்று கூறினார் மஞ்சு மனோஜ்குமார். மேலும், தான் அணிந்திருந்த கண்ணாடியை காண்பித்து, இது சிம்புவோட கண்ணாடி தான். ஒருமுறை அவர் ஐதராபாத்திற்கு வந்திருந்தபோது இதை அவருக்கு தெரியாமல் திருடி விட்டேன். இந்த பிரஸ்மீட்டிற்கு வரும்போது கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் வரவில்லை என்று ஜாலியாக சொன்னபடி அந்த கண்ணாடியை ஸ்டைலாக அணிந்து கொண்டார் மஞ்சு மனோஜ்குமார்.
மஞ்சு மனோஜ் நடித்த என்னை தெரியுமா? என்ற படத்தில் ரஜினியின் தண்ணி கருத்துருச்சி -என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தனர். அந்த பாடலை சிம்பு பாடியிருந்தார். அதிலிருந்து சிம்புவும், மஞ்சு மனோஜ்குமாரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.