ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கொஞ்சும் குமரி, பெற்றால் தான் பிள்ளையா உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை கேஆர் இந்திரா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68. காஞ்சிபுரத்தை பூர்வீமாக கொண்ட இந்திரா, 14 வயதில் சென்னைக்கு வந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1963-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‛கொஞ்சும் குமரி' படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இந்திரா, தொடர்ந்து பெற்றால் தான் பிள்ளையா, சுமைதாங்கி, பாத காணிக்கை, ஹலோ ஜமீன்தார், கந்தன் கருணை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். ரஜினியுடன் பணக்காரன், மன்னன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக ‛கிரிவலம்' படத்தில் ரிச்சர்டின் பாட்டியாக நடித்தார்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 250 படங்கள் நடித்திருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாது 500 படங்களுக்கு மேல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றியுள்ளார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் ஏராளமான சீரியல்களில் நடித்திருக்கிறார்.
சென்னை, தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்த இந்திராவுக்கு ஏற்கனவே மூட்டு வலி இருந்து வந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இந்திராவுக்கு கணவர் சங்கர நாராயணன், மகள் ஜெயகீதா ஆகியோர் உள்ளனர். ஜெயகீதா, தற்போது டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக உள்ளார். இந்திராவின் உடல், அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க உறுப்பினரான கே.ஆர்.இந்திராவிற்கு நடிகர் சங்கம் சார்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோர் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நாளை(மார்ச் 17-ம் தேதி), வெள்ளியன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.