ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
இயக்குனர் மற்றும் சின்னத்திரை சங்க உறுப்பினர் செய்யாறு ரவி, மாரடைப்பால் காலமானார். கார்த்தி நடித்த அரிச்சந்திரா, பிரபு நடித்த தர்மசீலன் படங்களை இயக்கியவர் செய்யாறு ரவி. அதன்பின்னர் படங்கள் இயக்க வாய்ப்பு வராததால் சின்னத்திரை பக்கம் சென்றார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கோபுரம், பணம், ஆனந்தம் போன்ற சீரியல்களை இயக்கினார். தற்போது ஜீ தமிழில் உருவாகி வரும் ‛அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' என்ற சீரியலை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்த நிலையில் இன்று(மார்ச் 11) பிற்பகல் 12 மணியளவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மரணம் அடைந்தார். ரவியின் உடல் அஞ்லிக்காக சென்னையில் அசோக் நகரில் உள்ளது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. செய்யாறு ரவியின் மரணம் சின்னத்திரை திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.