பிளாஷ்பேக் : ஆண்பாவத்தில் 5 நாள் மட்டும் நடித்த ரேவதி | தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி | ஜிஎஸ்டி சோதனை பற்றி விஷ்ணு மஞ்சு விளக்கம் | பிளாஷ்பேக் : என்.எஸ்.கே, மதுரம் ஜோடிக்கு போட்டியாக வந்த காமெடி ஜோடி | கிரேஸ் ஆண்டனிக்காக 5 மாதங்கள் காத்திருந்த ராம் | ஆஸ்கர் விருது விழா : கமலுக்கு அழைப்பு | நான் கலெக்டர் ஆகணும்னு அப்பா ஆசைப்பட்டார் : பட்டிமன்ற பேச்சாளர் ராஜா | விதார்த் நடிக்கும் ஆந்தாலாஜி கதை | ஜூலை இறுதியில் கூலி பாடல் வெளியீட்டு விழா | தலிபான்கள் ஒன்றும் இந்தப்பகுதியை ஆளவில்லையே? : கொந்தளிக்கும் சுரேஷ் கோபி பட இயக்குனர் |
இயக்குனர் மற்றும் சின்னத்திரை சங்க உறுப்பினர் செய்யாறு ரவி, மாரடைப்பால் காலமானார். கார்த்தி நடித்த அரிச்சந்திரா, பிரபு நடித்த தர்மசீலன் படங்களை இயக்கியவர் செய்யாறு ரவி. அதன்பின்னர் படங்கள் இயக்க வாய்ப்பு வராததால் சின்னத்திரை பக்கம் சென்றார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், கோபுரம், பணம், ஆனந்தம் போன்ற சீரியல்களை இயக்கினார். தற்போது ஜீ தமிழில் உருவாகி வரும் ‛அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' என்ற சீரியலை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வந்த நிலையில் இன்று(மார்ச் 11) பிற்பகல் 12 மணியளவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் மரணம் அடைந்தார். ரவியின் உடல் அஞ்லிக்காக சென்னையில் அசோக் நகரில் உள்ளது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. செய்யாறு ரவியின் மரணம் சின்னத்திரை திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.