ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் |
அட்டகத்தி தினேஷ் நடித்த ஒருநாள் கூத்து என்ற படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதன்பிறகு உதயநிதியுடன் பொதுவாக என்மனசு தங்கம் படத்தில் மதுரைக்கார பெண்ணாக நடித்திருப்பவர், அடுத்தபடியாக ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக் படம் மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் கமிட்டாகி விட்டார். ஒரே படம் மூலம் கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்துள்ள நிவேதா, அடுத்தபடியாக நடிப்பதற்கும் சில டைரக்டர்களிடம் கதை கேட்டுள்ளார்.
இதுபற்றி நிவேதா கூறுகையில், ஒருநாள் கூத்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தேன். அது எனக்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதைப்பார்த்துதான் பொதுவாக என்மனசு தங்கம் படத்திற்கு புக் பண்ணினார்கள். முதல் படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்த நான், இந்த படத்தில் தேனியிலுள்ள கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். சிட்டியில் வளர்ந்த எனக்கு கிராமத்து பாவாடை தாவணி அணிந்து நடிப்பது புதுமையாக இருந்தது. அந்த வேடத்தை ரசித்து நடித்தேன்.
அடுத்தபடியாக, ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறேன். இது பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. அதனால் அடுத்தபடியாக விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர் களுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டிருக்கிறது என்று கூறும் நிவேதா பெத்துராஜை பலரும் மதுரைக்கார பெண் என்கிறார்கள். ஆனால் அவரைக் கேட்டால், என் சொந்த ஊர் கோவில்பட்டி. நான் படித்தது துபாயில் என்கிறார்.