ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ரெமோ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அதையடுத்து மோகன்ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை முடித்த பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம், ரெமோ டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதற்கிடையே, விஜயசேதுபதி சில படங்களில் டபுள் ஹீரோ கதைகளில் நடிப்பதை மனதில் கொண்டு சிவகார்த்திகேயனையும் சில டைரக்டர்கள் டபுள் ஹீரோ கதையுடன் அணுகினர். ஆனால் அவர் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றதும் கதையைகூட கேட்க மறுத்து விட்டாராம். நான் நடிக்கிற படங்களில் நான் மட்டுமே ஹீரோவாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறிய அவர், இதற்கு முன்பு பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் சேர்ந்து நடித்துள்ளேன். ஆனால் அது நான் வளர்ந்து வந்த நேரம். இப்போது எனக்கென ஒரு வியாபார வட்டம் உருவாகி விட்டது. இந்த இடத்தை இன்னும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. அதனால்தான் மீண்டும் கேடி பில்லா கில்லாடி ரங்கா-2 வில் நடிக்க அழைத்தபோதுகூட அதை நான் ஏற்கவில்லை என்று தனது நிலையை சொல்லி அனுப்புகிறார் சிவகார்த்திகேயன்.