'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ரெமோ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அதையடுத்து மோகன்ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை முடித்த பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம், ரெமோ டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதற்கிடையே, விஜயசேதுபதி சில படங்களில் டபுள் ஹீரோ கதைகளில் நடிப்பதை மனதில் கொண்டு சிவகார்த்திகேயனையும் சில டைரக்டர்கள் டபுள் ஹீரோ கதையுடன் அணுகினர். ஆனால் அவர் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றதும் கதையைகூட கேட்க மறுத்து விட்டாராம். நான் நடிக்கிற படங்களில் நான் மட்டுமே ஹீரோவாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறிய அவர், இதற்கு முன்பு பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் சேர்ந்து நடித்துள்ளேன். ஆனால் அது நான் வளர்ந்து வந்த நேரம். இப்போது எனக்கென ஒரு வியாபார வட்டம் உருவாகி விட்டது. இந்த இடத்தை இன்னும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. அதனால்தான் மீண்டும் கேடி பில்லா கில்லாடி ரங்கா-2 வில் நடிக்க அழைத்தபோதுகூட அதை நான் ஏற்கவில்லை என்று தனது நிலையை சொல்லி அனுப்புகிறார் சிவகார்த்திகேயன்.