சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
வெங்கட் பிரபுவை இயக்குநராக அடையாளம் காட்டிய சென்னை 28 படம், அவருக்கு மட்டுமல்ல, அந்தப்படத்தில் நடித்த பலருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்தி தந்தது. அதில் முக்கியமானவர் மிர்ச்சி சிவா. அந்தப்படத்திற்கு பிறகு சரோஜா, தமிழ்படம், கலகலப்பு, தில்லு முல்லு, வணக்கம் சென்னை போன்ற படங்களில் நடித்தவர், இப்போது சென்னை 28_II படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதிலும் சிவாவின் நடிப்பிற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று சிவாவுக்கு பிறந்தநாள், இந்த பிறந்தநாளை சென்னை 28_II படத்தின் வெற்றியோடு கொண்டாடி வருகிறார் மிர்ச்சி சிவா.
இதுப்பற்றி சிவாவிடம் பேசியபோது அவர் கூறியதாவது... ‛‛முதலில் என்னை நடிகனாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. யாருடைய பாணியையும் பின்பற்றாமல் எனக்கென்று தனி ஸ்டைல் அமைத்து நடிக்கிறேன். அடுத்தவர்களை சந்தோஷமாக வைத்து கொண்டால் நாமும் சந்தோஷமாக இருக்கலாம், எனவே முடிந்தவரை எல்லோரையும் சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்'' என்றார்.