மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
உடல் நலக்குறைவால் காலமான மூத்த பத்திரிகையாளர் சோவின் உடல், சென்னை, பெசன்ட் நகர் மின்மயானத்தில், தகனம் செய்யப்பட்டது.
நடிகர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் உள்ளிட்ட பன்முக திறமை கொண்டவர் சோ எனும் சோ ராமசாமி. சென்னை அப்பலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர் சோ இன்று அதிகாலையில் காலமானார். அவரது உடல், எம்.ஆர்.சி., நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, அஜித்குமார் என சினிமா நட்சத்திரங்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி, பிரதமர் மோடி, நடிகர் கமல் உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இதன் பின்னர், அவரது வீட்டில் இருந்து சோ உடல் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. இறுதிச்சடங்கை அவரது மகன் ஸ்ரீதர் செய்தார். இதன் பின்னர் சோ உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்களில், சோ உறவினர்கள்,, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ, வாசன், இல.கணேசன், நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி பொன் வண்ணன், பொது மக்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.