இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு திரையுலகத்தினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவும் ஜெயலலிதாவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்... ‛‛மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்கள் அன்பில் ஒரு தாயாகவும், அழகில் ஒரு தேவதையாகவும், அறிவில் மகா மந்திரியாகவும், ஆதரவில் கருணை உறவாகவும், கண்டிப்பில் நேர்மை ஆசிரியராகவும், அன்பு, பாசம், நேசம், தியாகம் அக்கறை, அரவணைப்பு என எல்லா உணர்வுகளையும் கொண்டு வாழ்ந்த தெய்வம் அம்மா! அவர்களின் இழப்பு தமிழகத்துக்கும் அகிலத்துக்கும் பேரிழப்பாகும். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்!''
இவ்வாறு தாணு கூறியுள்ளார்.